Sunday 5th of May 2024 12:33:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் முன்நின்றவர் - இராஜமகேந்திரனுக்கு பிரதமர் இரங்கல்!

மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் முன்நின்றவர் - இராஜமகேந்திரனுக்கு பிரதமர் இரங்கல்!


மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் முன்நின்ற ஆர்.ராஜமகேந்திரன் நமது நாட்டின் தொலைக் காட்சி மற்றும் வானொலி துறையை நவீனமயப் படுத்துவதில் முன்னோடி யாக திகழ்ந்தார்' என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜமகேந்திரனின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் மனவருத்த மடைந்தேன்.

திறமையான தொழிலதிபராக இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிக வலையமைப்பை பராமரித்து வந்த ஆர்.ராஜமகேந்திரன் அவர்கள் அதனூடாக இலட்சக்கணக்கான மக்களுக்கு உறுதுணையாக விளங்கினார்.

சிரச, சக்தி, எம்.ரி.வி. ஆகிய ஊடக வலையமைப்பின் உரிமையாளராக மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொடர்ந்தும் முன்நின்ற ஆர்.ராஜமகேந்திரன் நமது நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலி துறையை நவீனமயப் படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.

மக்களுக்கு உண்மை செய்தியை வழங்குவதற்கும் மேலாக 'கம்மெத்த' போன்ற நிகழ்ச்சிகளின் ஊடாக கிராம மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்த ஆர்.ராஜமகேந்திரன், ஒரு திறமையான தொழி லதிபராகவும் சமூக சேவையாளராகவும் இந்நாட்டிற்காக தனது கடமையை நிறை வேற்றியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE